top of page
  • Writer's pictureRaj

மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் | புதிய தகவல் | Government schemes Tamil

Government scheme Tamil Latest Update: மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் | புதிய தகவல் | Government schemes Tamil

இந்த புதிய தகவல்களில் நமக்கு கிடைக்க பெற்றதாவது. 2023 முதல் 2024ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதில் தமிழக அரசு கடந்த சில வாரங்களாக கடுமையாக உழைத்து வருகிறது. நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்படும் முக்கிய கூறுகள் மற்றும் திட்டங்கள் தற்போது துறை சார்ந்த ஆலோசனைகள் மேற்கொள்ள உள்ளது.


Government Free scheme


மேலும், மார்ச் முதல் வாரத்தில் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் நடத்துவார், அங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகளுக்கான பரிந்துரைகள், நிதி விநியோகம் குறித்து முக்கிய குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுக்கப்படும்.

இந்த ஆலோசனைகள் முடிந்ததும் பட்ஜெட் அறிக்கை தயாரிப்பில் நிதித்துறை ஈடுபடும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன், தமிழக நிர்வாகம் அமைச்சரவை கூட்டத்தை கூட்டும். நிதிச் சுருக்கம் மார்ச் முதல் வாரத்தில் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், மார்ச் மூன்றாவது வாரத்தில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்வார். வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறையின் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் 2023 அறிவிப்பு

Tamil Nadu Government scheme 2023


நிதித்துறை வட்டாரங்களின்படி, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல்களைக் கணக்கில் கொண்டு நிதிநிலை அறிக்கையில் பொது மக்களுக்கு ஆக்கபூர்வமான அறிவிப்புகள் வெளியாகலாம். மேலும், குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமைத் திட்டத்தின் தொடக்கத் தேதி குறித்து அறிவிப்பும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இதே போன்ற நிதி உதவி வழங்கப்படுகிறது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில், இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை இருந்தால் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூபாய் 2500 வழங்கப்படும். அவர்கள் அரசாங்கத்தின் தொழிற்பயிற்சி வசதிகளில் பதிவுசெய்து பயிற்சிகளை பெற வேண்டும். பயிற்சியின் விளைவாக நிறுவனம் தொடங்கப்பட்டால், இந்த உதவித்தொகை வழங்கப்படும். சுயமாக வேலை செய்ய பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுபோன்ற பயனுள்ள தகவலை பெற நமது மெய் தமிழன் சேனலை பின்தொடரவும்.

bottom of page