புதிய 500 ரூபாய் நோட்டும் செல்லாது அதிர்ச்சி PM Modi New 500 rupee ban news - RBI
New 500 Rupee note Ban News Real Or Fake ?
The latest news on social media about Rs.500 Rupee
RBI Gives an Explanation for that statement, புதிய 500 ரூபாய் நோட்டும் செல்லாது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. ரிசர்வ் வங்கி தரப்பில் அதிகாரபூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு சரியான விளக்கம் ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. தற்போது அதிகபட்ச மதிப்புடையதாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் இருக்கிறது. ஆனால் 2000 ரூபாய் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை என்பதால் 500 ரூபாய் மட்டுமே பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே.
Money
இந்த நிலையில் அதிகபட்ச மதிப்பு 500 ரூபாய் நோட்டில் எழுதினால் அல்லது கிறுக்கினால் அந்த நோட்டு செல்லாது என்றும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுபற்றி இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. பொதுவாகவே 500 ரூபாய் உள்பட எந்த ஒரு ரூபாய் நோட்டிலும் பெயரோ அல்லது வேறு குறிப்புகளை எழுத கூடாது என்றும் ஆனால் அதே நேரத்தில் அவ்வாறு தவறுதலாக எழுதினால் அது செல்லாது என வைத்துக் கொள்ள முடியாது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம் என்று கூறுவது எதற்காக என்றால் அது சேதம் அடையும் தன்மை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால்தான் அதில் எதையும் எழுத வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
500 rupee ban news RBI 2023 Real or Fake
இதனை அடுத்து சமூக ஊடகங்களில் ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என்ற தகவல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி மேலும் கூறியபோது ’ரூபாய் நோட்டில் எழுதுவது மட்டுமின்றி பின் குத்துவது மற்றும் மடித்து விளையாடுவது ஆகியவை கூடாது என்றும் ரூபாய் நோட்டுகள் சேதமாகி இருப்பதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக நீங்கள் எந்த வங்கியில் உள்ள கிளைகளிலும் கொடுத்து மாற்றி மாற்றிக் கொள்ளலாம் என்றும் அல்லது உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து செய்து கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல் மண்ணில் புதைந்திருப்பது உள்பட ரூபாய் நோட்டுகள் எந்த வடிவத்தில் சேதம் அடைந்திருந்தால் எந்த வங்கியில் உள்ள கவுண்டர்களும் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரிசர்வ் வங்கி அச்சடித்த பணம் செல்லாது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளை பெற மெய் தமிழன் சேனலை பின்தொடரவும்.
தினசரி வேலைவாய்ப்பு தகவலை பெற Telegram குரூப்பில் சேருங்கள்